
புதன், 26 மே, 2010
கை 'கொடுக்குக்' கை
பழைய கதை
பகலும் இரவும் கலக்கும் அந்தி மாலை நேரம்
குருவின் நிழல் பின்புரமாய் சரிய,
தள்ளிவிட்ட மகிழ்ச்சியில் வீழும் சூரியன்!
மாலை தென்றலும் ஆற்றங்கரை குளிரும்
நிழல் அது கால் தட்டாமல்
அறிவு பசியுடன் சிஷ்யன் பின் தொடர,
குருவின் சிந்தனை கலைந்தது.
பார்வை கூர்மை கொண்டது, மனமோ ஈரம் நிறைந்தது.
ஆற்றினிலே ஒரு தேள் தத்தளித்தது,
உயிர் தக்க கொந்தளித்தது.
கைகொண்டு தூக்கினார் வெடுக்கென்று கொட்டிற்று,
அது அதன் குணம்,
மீண்டும் மீண்டும் முயற்சி,
இது மனித மனம்.
முயற்சி தான் மெய் வருத்த கூலி தந்தது,
அச்சிறு உயிரும் கரை நடந்தது
புரியா சிறுவன் பணிந்தான் குருவினை,
குரு இதழ் விரிந்தார்
அதன் குணம் மாறா
இது என் குணம்,
இதுவே!
கடவுள் மனிதனை ஆறறிவுடன் படைத்ததின் சாட்சி.
புதிய கதை
வசந்தகள் ஓடின, பழையது கழிந்தது
புதியன பிறந்தன, சிஷ்யன் குருவானான்
அதே ஆற்றங்கரை, உடன் புதிய சிஷ்யர்கள்,
வேறொரு தேள் வழக்கம்போல் தத்தளித்தபடி தண்ணீரில்,
குருவும் முன்றார் கைகொண்டு காப்பாற்றிட
கொடு நஞ்சு தேளும் கொட்டிற்று முனையும் போதெல்லாம்
கடைசியில் மனம் தளரா குரு
முழு முயற்சியின் பலனாய் கரை சேர்த்தார் வலியோடு,
புதிய சிஷ்யர்கள் பணிந்து புரிய முற்படு முன்
முந்திகொண்டது அந்த விஷ தேள்,
வார்த்தைகளில் விஷமும், பேச்சாலும் கொட்டியது,
"தெளிவாய் தான் உள்ளீரா".
("இன்னும் அறிவு வரலியா")
சனி, 22 மே, 2010
இந்திய விமான விபத்து / அஞ்சலி
குடும்பத்தை காக்க நினைத்து வருட முடிவில், விடுமுறையில்,
அந்த குடும்ப உறுப்பினர்களை காண, ஆவலுடன் இன்று
அதிகாலையில் உறக்கத்தை மறந்த விழிகளுடன் காத்திருந்து
கொடிய கடைசி நிமிட ஏக்கங்களுடன் உயிர் நீத்த என் அன்பு இந்திய நண்பர்களே உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன், உங்களின் குடும்பத்தாரின் துயரில் பங்கெடுக்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவா, உயிர் நீத்த ஆன்மாக்களுக்கு நிம்மதியை கொடு.
அவர் தம் குடும்பத்தாரை உடன் நின்று காப்பாற்று.
திங்கள், 17 மே, 2010
வார்த்தை வரம்
கதை : "அந்த இரண்டு நிமிடம்"
திங்கள், 10 மே, 2010
என் மகள்
என் வெற்றிடத்தை நிரப்ப வந்த பாசக் காற்று நீ,
வாழை அடி வாழையாய் என் குலம் தழைக்க வந்தவளே
நீ வாழிய பல்லாண்டு நம் குலம் தழைக்க.
வாழைகன்றே நான் இட்டிருப்பது அன்பு வேலி
உன்னை எந்த பிரச்சனைகளும் தீண்டாமலிருக்க.
என் கண்ணிமையில் உன்னை மூடி காக்க நினைக்கிறன்
நீயோ கண்ணுக்கெட்டாத தூரத்தில் உன் தாயுடன்.
இது தான்
கடலோடியும் திரவியம் தேட வந்ததின் விலை.
வியாழன், 6 மே, 2010
பார்த்ததில்/படித்ததில்/கேட்டதில் ரசித்தது
புதன், 5 மே, 2010
நம்பிக்கையே வெற்றி
பஞ்ச பூதத்துல எந்த பூதம் நல்ல பூதம்
செவ்வாய், 4 மே, 2010
படித்தேன்/பார்த்தேன் ரசித்தேன்
எனது அலுவலக பணி காரணமாக ஒரு புதிய என்னை விட வயதில் குறைந்த வேற்று மொழி பேசும் நண்பர் கிடைத்தார். அவரின் சுறுசுறுப்பு, மற்றவர்களிடம் பழகும் குணம் என்னை வெகுவாக கவர்ந்தது. அது அவர்க்கு இயல்பிலேயே வந்ததா அல்லது அவர் எதிரே ஒட்டி வைத்து இருந்த வாசகத்தில் உள்ளபடி அவர் நடக்கிறாரா என்ற எண்ணம் வந்தது. எனக்கு படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
அந்த ஆங்கில வாசகத்தை அப்படியே மொழி பெயர்த்து தருகிறேன் நீங்களும் இதன் சிறப்பை உணர்வீர்கள், இதோ
"நான் கற்றுகொண்டது என்னவெனில்,
மனிதர்கள் மறக்ககூடும் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று,
மனிதர்கள் மறக்ககூடும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று
ஆனால்
மனிதர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள் நீங்கள் அவர்களின் மனதை எப்படி பாதிதீர்கள் என்று.
மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாடதீர்கள்
ஏனெனில் நீங்கள் அந்த விளையாட்டில் வெள்ளகூடும்
ஆனால்
நீங்கள் அந்த மனிதரை இழக்கக்கூடும் 'என்றென்றும்' .
ஞாயிறு, 2 மே, 2010
சிறுகதை : ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே
அம்மா சீக்கிரம் டிபன் வை லேட்டவுது என்றபடி தலை வாரி அதை கலைத்து கொண்டான். இப்ப ஏன்டா கத்தறே, அதுக்கு காலையிலேயே சீக்கிரம் எழுந்து கிளம்பனும் அத விட்டுட்டு இப்ப பறக்கிறே என்றபடி டிபனை வைத்தார் அம்மா. என் சீக்கிரமா பறக்கிறேனா இப்ப தான் எல்லா கல்லூரி பெண்களும் வர நேரம் என மனிதில் நினைத்தபடி வேகமாய் சாப்பிட்டான்.
தெருவில் இறங்கி நாலு வீடு தண்டி சென்றதும் இவனை பார்த்துவிட்டு எப்போதோ தயாராகி இருந்த நண்பன் சேகர் "இன்னைக்கும் லேட்டாடா" என்றபடி சேர்ந்துகொண்டான்.
பஸ் ஸ்டாண்டில் இவனை ஒத்த மாணவர்கள் நின்றுகொண்டு பஸ்ஸை எதிர் நோக்கி காத்துகொண்டு இருந்தார்கள்.
கல்லூரியை அடைந்து வகுப்புகளை ஒப்பேற்றி அல்லது தூங்கி வழிந்து, நண்பர்களை கிண்டல் செய்து மாலையில் பேருந்தை பிடித்து வழக்கம் போல் படியில் தொங்கிக்கொண்டே வந்தான் பிரதீஷ். திடீரெண்டு தான் கவனித்தான், இதற்க்கு முன் இப்படி ஆனதில்லை, எத்தனையோ பெண்களை கண்டிருக்கிறான் ஆனால் இப்படி மனதை பறிக்கும் படியான அழகை கண்டதில்லை. நடத்துனர் இருக்கைக்கு அருகே நின்று கொண்டிருந்த அவளை அருகில் சென்று காண மனம் துடித்தது. மேலும் இரண்டு படிக்கட்டுகளை ஏறி நடத்துனர் பக்கத்தில் நின்றான். அவள் பார்க்க மாட்டல என்ற எண்ணம் மேலோங்க அவளையே எவ்வளவு நேரம்தான் பார்த்துகொண்டு இருந்தான் என்று தெரியவில்லை, "டே இறங்குடா போதும், ஸ்டாப்பிங் வந்துடுச்சு" என்று சேகர் உலுக்கிய பிறகே அவன் நிதானத்துக்கு வந்தான். சட்டென கிழே இறங்கியவன் அவளை ஜன்னல் வழியே பார்க்க முயற்சிதான். ஆனால் அவள் அங்கு இல்லாததை கண்டு மனம் நொந்தான். சட்டென்று அவள் இறங்கி அவனை கடந்து சென்ற அவள் செல்லும்முன் அவனை ஒரு பார்வை பார்த்து சிறிய புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு சென்றால். இவனுக்கு உலகமே சிறிய கால் பந்து போன்று தோன்றியது.
என்னடா அவளையே பார்த்து கிட்டு இருக்க, அவல உனக்கு தெரியாதா, அவ நம்ப தெருவுல தான் இருக்கா, நம்ப ரூட்டுல தான் தினமும் வருவா. நம்ப குரூப் தான் , இப்ப பிரஸ்ட் இயர் படிக்கிறாள் என்று சேகர் அவளை பத்தி முழு தகவலையும் சொல்லி முடித்தான். மச்சான் ப்ளீஸ் அவள் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்குடா, கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா என்றான். பிரதீஷ் உண்மையிலேயே உனக்கு அவல புடிச்சுருக்கா அப்போ நான் சொல்றபடி செய் என்று தனக்கு தெரிந்தவற்றை விவரித்தான் சேகர்.
மணி ஐந்து முப்பது அலாரம் அடித்து வீட்டை எழுப்பியது.
யார் இவ்வளவு சீக்கிரம் எழுந்துகறது என்று கூறியபடியே எழுந்த அப்பாவிற்கு தன் கண்களை நம்ப முடியாமல் முழித்தார். அங்கு "அம்மா இன்னைக்கு நான் பால் வாங்க போறேன்" என்று கூறியபடி அம்மாவிடம் பால் கார்டையும் பையும் பிடிங்கிகொண்டிருந்தன் பிரதீஷ். அவ தினமும் காலைல பால் வாங்க வருவா என்று சேகர் கூறியது மனதுக்குள் ஒலித்தது.