திங்கள், 10 மே, 2010

என் மகள்

என் பாசமிகு மகளே,
என் வெற்றிடத்தை நிரப்ப வந்த பாசக் காற்று நீ,
வாழை அடி  வாழையாய் என் குலம் தழைக்க வந்தவளே
நீ வாழிய பல்லாண்டு நம் குலம் தழைக்க.
வாழைகன்றே  நான் இட்டிருப்பது அன்பு வேலி
உன்னை எந்த பிரச்சனைகளும் தீண்டாமலிருக்க.
என் கண்ணிமையில் உன்னை மூடி காக்க நினைக்கிறன்
நீயோ கண்ணுக்கெட்டாத  தூரத்தில் உன் தாயுடன்.
இது தான்
கடலோடியும் திரவியம் தேட வந்ததின் விலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக