செவ்வாய், 22 ஜூன், 2010

கடவுள் என் முன்னே நிற்கிறார்

விரித்த விழி மூடவில்லை,
உள்ளிழுத்த ஆவி வெளிவரவில்லை,
மயிர் கால்கள் குத்திட்டு நிற்க,
'சிலையாய்' நின்றேன்
கடவுள் என் முன்னே நிற்கிறார்.


                        ********


தினமும் வேண்டுவேன் கடவுளை,
கடவுளே இதை கொடு, அதை கொடு,
உடனே கொடு, சீக்கிரம் கொடு,
இத்தனை நாட்களுக்குள் கொடு,
இத்தனை மாதங்களுக்குள் கொடு,
கொடு, கொடு, கொடு.
கடவுள் 'கேட்டார்'
சரி கேட்டதையெல்லாம் தருகிறேன்
அத்துடன் நீ திருப்தி கொள்வாயா?

2 கருத்துகள்: