கண்'நீர்' ரத்தம்
உதட்டிலே முகமுடி சிரிப்பு
கண்களிலே பூட்டிய நெருப்பு
இது சமூகம் தனை எதிர்கொள்ள.
உள்ளத்திலே காயம் பட்டது
அது உனக்கு தெரிய நியாயம் இல்லை.
உனக்கு கண்களும் இல்லை, இதயமும் இல்லை.
ரத்தம் வழிந்ததே என் கண்களில்,
அதை வெறும் கண்'நீர்' என்று நினைத்தாயோ.
வார்த்தை அம்பு எய்ததால் வந்த காயம் மாறும்
******
